Photos

Photos
Me and Myself

Saturday, March 31, 2012

விழுவதெல்லாம் அழுவதற்கில்லை

இலையுதிர் காலம் -
மரம் மொட்டையாக நின்றது.
புல் மேய்ந்த மாடுகள்,
மரத்தை இரக்கத்தோடு நோக்கின
உன் இலைகள் விழுந்து கொண்டிருக்கின்றன
உன்னைப் பார்த்தால் அழ வேண்டும் போல் இருக்கிறது
என்ற ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது

மரம் சொன்னது
நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்
நிமிர்ந்தே நின்றது மரம்
அது சொன்னது -
விழுவதெல்லாம் அழுவதற்கில்லை
எழுவதற்காக...

No comments: